|
|||||
கடலை நோக்கி நகரும் உலகின் மிகப்பெரும் பனிப்பாறை - பூமிக்கு புது பிரச்னை |
|||||
அண்டார்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரும் பனிப்பாறை அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை போன்று 3 மடங்கு பெரியது.
**********************
உலகின் மிகப்பெரும் பனிப்பாறையான அண்டார்டிகாவில் இருக்கும் A23a, கடந்த 30 ஆண்டுகளில் முதன் முறையாக கடலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து புவி மற்றும் சுற்றுச் சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
****************************
பாதிப்புகளை புவி எதிர்கொள்ளும்
*****************************
ஏறக்குறைய ஒரு டிரில்லியன் மெட்ரிக் டன் எடையுள்ள பனிப்பாறை, வலுவான காற்று மற்றும் நீரோட்டங்களால் உந்தப்பட்டு, அண்டார்டிக் தீபகற்பத்தின் வடக்கு முனையை கடந்து தற்போது வேகமாக நகர்ந்து வருவதாக சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.
********************************
இதனை அசாதாரணமான நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ள அறிவியல் வல்லுனர்கள், A23a பனிப்பாறையின் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கூறுகின்றனர்.
****************************
பனிப்பாறை நகர்வு காரணமாக சூழலியல் பாதிப்புகளை புவி எதிர்கொள்ளும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவில் இருக்கும் விலங்குகள் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும், லட்சக்கணக்கான பென்குயின்கள் மற்றும் கடல் பறவைகள், இந்த பனிப்பாறையின் நகர்வால் இடம்பெயர்ந்து செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
**************************
புவி வெப்பயமாதல் மற்றும் சூழல் மாற்றங்கள்
************************
இந்த பனிப்பாறை அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் போன்று 3 மடங்கு பெரியது. அதாவது 4 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் இந்த பாறை அமைந்துள்ளது. முழுவதுமாக இந்த பனிப்பாறை கடலில் மூழ்கினால் கடல் மட்டம் வெகுவாக உயரக் கூடும்.
*************************
அத்துடன் கடலில் வாழும் அரிய வகை உள்ளிட்ட பல உயிரினங்கள் அழிவை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், அண்டார்டிகாவில் இருந்து வடக்கே தென்னாப்பிரிக்காவை செல்லக் கூடிய கப்பல்களின் போக்குவரத்தையும் பாதிக்கும் என்று சூழலியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். புவி வெப்பயமாதல் மற்றும் சூழல் மாற்றங்கள் இந்த உலகின் மிகப்பெரும் பனிப்பாறையின் நகர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
அண்டார்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரும் பனிப்பாறை அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை போன்று 3 மடங்கு பெரியது. உலகின் மிகப்பெரும் பனிப்பாறையான அண்டார்டிகாவில் இருக்கும் A23a, கடந்த 30 ஆண்டுகளில் முதன் முறையாக கடலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து புவி மற்றும் சுற்றுச் சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாதிப்புகளை புவி எதிர்கொள்ளும்
பனிப்பாறை நகர்வு காரணமாக சூழலியல் பாதிப்புகளை புவி எதிர்கொள்ளும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவில் இருக்கும் விலங்குகள் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும், லட்சக்கணக்கான பென்குயின்கள் மற்றும் கடல் பறவைகள், இந்த பனிப்பாறையின் நகர்வால் இடம்பெயர்ந்து செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. புவி வெப்பயமாதல் மற்றும் சூழல் மாற்றங்கள் இந்த பனிப்பாறை அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் போன்று 3 மடங்கு பெரியது. அதாவது 4 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் இந்த பாறை அமைந்துள்ளது. முழுவதுமாக இந்த பனிப்பாறை கடலில் மூழ்கினால் கடல் மட்டம் வெகுவாக உயரக் கூடும். அத்துடன் கடலில் வாழும் அரிய வகை உள்ளிட்ட பல உயிரினங்கள் அழிவை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், அண்டார்டிகாவில் இருந்து வடக்கே தென்னாப்பிரிக்காவை செல்லக் கூடிய கப்பல்களின் போக்குவரத்தையும் பாதிக்கும் என்று சூழலியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். புவி வெப்பயமாதல் மற்றும் சூழல் மாற்றங்கள் இந்த உலகின் மிகப்பெரும் பனிப்பாறையின் நகர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. |
|||||
by Kumar on 12 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|