இந்தோனேஷியாவின் சுலாவேஸியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தின் காரணமாக எரிமலையும் வெடித்துள்ளதாக அரசு எரிமலை ஆய்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சொபுடான் என்ற இந்த எரிமலை 6,000 மீட்டர்களுக்கு வானில் சாம்பல் புகையைக் கக்கியுள்ளது. இன்னும் அங்கு இருப்பவர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை. எனினும் பொதுமக்கள் அடுத்தடுத்த விளைவுகளால் கடும் பயத்தில் உள்ளனர்.
“சுலாவேஸி பூகம்பம் இந்த எரிமலை வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறோம். விமானங்கள் இப்பகுதியில் பறக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. பூகம்ப அதிர்ச்சி அலைகள், எரிமலையின் அடியில் இருக்கும் மேக்மா பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தி வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
2004 இந்தோனேஷிய பூகம்பமும், அதனையடுத்து மிகப்பெரிய தெற்காசிய சுனாமி பேரழிவுக்குப் பிறகு 2005-ல் தலாங் எரிமலை வெடித்ததும் இதற்கு உதாரணமாகக் கூறப்படுகிறது.
|