LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஆயுதங்களைக் கட்டுப்படுத்த ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்- அதிபர் டிரம்ப் பேட்டி!

‘‘ஆயுதங்களை கட்டுப்படுத்த ரஷ்யாவுடன்  செய்து கொண்ட ஐஎன்எப் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்’’ என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். 

ஆயுத உற்பத்தி மற்றும் சோதனைகளை கட்டுப்படுத்தவும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனும், சோவியத் ரஷ்யா அதிபராக இருந்த மிக்கேல் கோர்பசேவும் கடந்த 1987ம் ஆண்டு, ஐஎன்எப் (நடுத்தர ரக அணு ஆயுதங்கள் கட்டுப்பாடு) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் 300 மைல் முதல் 3,400 மைல் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை வைத்திருக்கக் கூடாது, உற்பத்தியும் செய்யக் கூடாது மற்றும் பரிசோதனையும் செய்யக் கூடாது. 

இந்த ஒப்பந்தம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் காலாவதியாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஒப்பந்ததத்தில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்து உள்ளார்.

 இந்த ஒப்பந்தத்தின் விதிமுறையை மீறி ரஷ்யா ‘நோவாடர்’ என்ற ஏவுகணைகளை உற்பத்தி செய்ய உள்ளது. அதனால், இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அமெரிக்கா முடிவு செய்து உள்ளது. 

இது குறித்து அமெரிக்காவின் நெவடா மாநிலத்தில்  பேட்டியளித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது;

 ‘‘ஆயுத கட்டுப்பாடு குறித்த புதிய ஒப்பந்தத்துக்கு ரஷ்யாவும், சீனாவும் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ஐஎன்எப் ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் வெளியேறுவோம். ஆயுதங்களை நாங்களும் தயாரிக்கப் போகிறோம். 

ரஷ்யாவும், சீனாவும் ஏவுகணைகளை தயாரிக்கும்போது, நாங்கள் மட்டும் ஐஎன்எப் ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் முன்னாள் அதிபர் ஒபாமா அமைதியாக இருந்தது எனக்கு தெரியாது’’

இவ்வாறு டிரம்ப் கூறினார். 

அமெரிக்காவின் இந்த முடிவு, மீண்டும் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தத்தில் சீனாவுடன் அமெரிக்கா மோதி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக முடிவு செய்துள்ளது பற்றி ரஷ்யாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கய் ரியாப்கவ்  அளித்த பேட்டியில்,  “இது மிகவும் ஆபத்தான முடிவு. சர்வதேச நாடுகளால் இதை புரிந்து கொள்ள முடியாது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இந்த முடிவுக்கு கடுமையான கண்டனங்கள் எழும்” என்றார்.

by Mani Bharathi   on 22 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.