LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி!

பாம்பன் ரயில் பாலத்தில் 85 நாட்களுக்குப்பின், மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் அமைக்கப்பட்ட மண்டபம் - பாம்பன் ரயில் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல நடுவில் திறந்து வழிவிடும் வகையில் ஷெர்ஜர் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. 

பாலத்தில் உள்ள ஒரு இரும்பு பீமில் விரிசல் ஏற்பட்டதால், கடந்த ஆண்டு டிச. 4ம் தேதி முதல் பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது. 
வெளியூர் பயணிகள் அனைவரும் மண்டபத்தில் இறங்கி ராமேஸ்வரம் வந்து சென்றதால் மிகவும் அவதி அடைந்தனர்.

இதனிடையே பழுதான தூக்குப்பாலம் சீரமைக்கப்பட்டு பயணிகள் இல்லாமல் இருமுறை ரயில்கள் இயக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. 

சென்னையில் நடந்த ரயில்வே உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தின் முடிவில், பாலத்தில் மீண்டும் ரயில்கள் இயக்குவதற்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து  பாம்பன் பாலத்தின் வழியாக அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தன. ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் தூக்குப்பாலத்தின் வழியாக சென்றன.

வாரணாசியில் இருந்து புறப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில், சிக்னல் கிடைத்ததை தொடர்ந்து பாம்பன் பாலம் வழியாக 10 கிமீ வேகத்தில் பயணித்து,  ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தது. 

தொடர்ந்து சென்னையில் இருந்து புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில், கன்னியாகுமரியில் இருந்து வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், திருப்பதியிலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை - ராமேஸ்வரம் பாசஞ்சர், திருச்சி - ராமேஸ்வரம் பாசஞ்சர் என அனைத்து ரயில்களும் ஒவ்வொன்றாக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தன. 

இதுபோல் ராமேஸ்வரத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் புறப்பட்டு சென்றன. 85 நாட்களுக்குப்பின் மீண்டும் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை துவங்கியதால், ராமேஸ்வரம் ரயில் நிலையம் பயணிகளின் வருகையால் பரபரப்பாக காணப்பட்டது. பயணிகளும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டனர்.

by Mani Bharathi   on 01 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.