LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழக அரசு சார்பில் பள்ளி கல்விக்காகவே தனி சேனல்- பொங்கல் முதல் தொடங்குகிறது!

தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர் பான தகவல்களை ஒளிபரப்ப தனியாக ஒரு தொலைக்காட்சி சேனலை பொங்கல் முதல் தமிழக அரசு தொடங்குகிறது.

தமிழகத்தில் கல்வித் திட்டங்கள் குறித்து  பொதுமக்கள் அறிந்து கொள்ளவும்,  பொதுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனை கள் வழங்கவும் அரசு சார்பில், புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இதையடுத்து இதற்கான பணி களை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் மற்றும் இணை இயக்குநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

கல்வித் தொலைக்காட்சி சேனலுக் கான முன்தயாரிப்பு பணிகள் செய்ய, தனியாக ஒரு குழுவும் ஏற்படுத்தப்பட்டது. இப்போது கேமிராக்கள் உட்பட தொழில்நுட்பக் கருவிகள் வாங்கும் பணிகள் நடந்து வருகின்றன. பொங்கல் முதல் சேனலை ஒளிபரப்ப அரசு முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதி காரிகள் கூறியதாவது:

இந்தியாவில் கேரளா உட்பட சில மாநிலங்களில் மட்டுமே கல்விக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேனல் உள்ளது. அதுபோல தமிழக மாணவர் களுக்காக சேனல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தளம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாலகத்தின் 8-ம் தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி செயல்பாடுகளைப் பதிவு செய்வதற்காக வழக்கமான கேமிராக்களுடன், ஆளில்லா பறக்கும் கண்காணிப்பு (ட்ரோன்) கேமிராவும் வாங்கப்பட உள்ளன.

இந்தப் பணிகளுக்காக முதல் கட்ட மாக ரூ.1.35 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. அரசு கேபிளில் 200-ம் அலைவரிசையில் சேனல் ஒளிபரப்பாகும். அரசின் புதிய திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத் தேர்வுகளுக்கான விளக்கங்கள், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கான சுற்றறிக்கைகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல அம்சங்கள் இடம் பெறும்.

இதன் மூலம் கல்வித் துறை சார்ந்த அனைத்து செயல் பாடுகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். பொங்கல் பண்டிகை முதல் கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

by Mani Bharathi   on 18 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.