LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஓய்வூதியதாரர்கள் வசதிக்காக கருவூலக ஆணையரகம் தரவுதளம் அமைத்தது!

ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் வசதிக்காக கருவூல கணக்கு ஆணையரகம் தரவு தளத்தை அமைத்து உள்ளது.

ஓய்வூதியம் பெற்ற விவரங்கள், காலம் முடிவுற்ற ஓய்வூதியம் தொகுத்து பெறுதல், உயர்த்தி வழங்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம், ஓய்வூதிய நிலுவைகள், மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் பணப் பயன்கள் வங்கியில் வரவு வைக்கப்பட்டது போன்ற பல விவரங்களை கருவூலங்களை அணுகாமலேயே அறிந்து கொள்ளலாம்.

சென்னை தேசிய தகவல் மையத்துடன் இணைந்து இந்த தரவு தளத்தை தமிழ்நாடு அரசின் கருவூல கணக்கு ஆணையரகம் உருவாக்கி உள்ளது.

இதன் மூலம், ஓய்வூதியர் வாழ்நாள் சான்று அளித்த விபரம், 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம், வருமானவரி தாக்கல் செய்ய தேவைப்படும் வருடாந்திர ஓய்வூதிய விபரங்கள், ஓய்வூதியர் வாரிசுதாரர் நியமனம், பண்டிகை முன்பணம், புதிய மருத்துவக்காப்பீடு திட்டம் மற்றும் குடும்பநல நிதிபிடித்தங்கள் போன்ற விவரங்களையும் தங்களது ஓய்வூதிய கொடுவை எண் மூலம் உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

இது தவிர ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் குறித்த தெளிவுரைகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், ஓய்வூதியர்களுக்கு தேவையான முக்கிய படிவங்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

ஓய்வூதியர்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்களை இத்தரவு தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கருவூலங்களிலும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னையிலும் சமர்ப்பிக்கலாம். இதன்மூலம் தமிழக அரசின் சுமார் 7.30 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவார்கள்.

ஓய்வூதியர் தரவுதளத்தினை https://tnpensioner.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் பெறலாம். 
இந்த தரவு தளத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

by Mani Bharathi   on 21 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.