LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ரூ 10 ஆயிரமாக உயர்த்தி அறிவிப்பு!

தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பணிக்கு வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று அரசு தெரிவித்தது. 
இருப்பினும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்வதால், உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. 
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், 25ம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கிடையே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், போராட்டம் நீடிக்கும் என்று அறிவித்து உள்ளனர்.
இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ்  ஒரு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.  அதன்படி, அந்தந்த பள்ளிகள் இயங்கும் பகுதிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 
பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் இல்லாத பள்ளிகள் இருந்தால், அருகில் உள்ள உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் இயங்கும் பெற்றோர்- ஆசிரியர்  சங்கங்கள் மூலம் இந்த பணியை மேற்கொள்ளலாம்.  அவர்களுக்கு பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலம் தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.7500 வழங்க வேண்டும். 
இந்த வகை தற்காலிக ஆசிரியர்களை பொறுத்தவரையில் தொடக்கப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் நியமித்து பள்ளிகள் அமைதியாக நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு வரவில்லை என்றால், 26ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கி 28ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை வைத்து பள்ளிகளை திறந்து எந்த தடையும் இல்லாமல் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். 
இவ்வாறு கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் தற்காலிக ஆசிரியருக்கு அறிவிக்கப்பட்டிருந்த தொகுப்பு ஊதியத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அதிகரித்து உள்ளது. ரூ 7500 ஆக இருந்த தற்காலிக ஆசிரியர் ஊதியம் ரூ 10 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. 
தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 28ம் தேதி பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 

by Mani Bharathi   on 27 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.