LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விளையாட்டு வீரர்களுக்கான 3% இடஒதுக்கீடு சிலம்பம் கற்றவர்க்கும் உரியதாகிறது, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

விளையாட்டு வீரர்களுக்கான 3 % இட ஒதுக்கீடு சிலம்பம் கற்றவர்க்கும் உரியதாகிறது, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழக அரசின் பணியிடங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு திறமைமிக்க விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இதில்  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பக் கலையும்  சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிலம்பம் சிறந்த முறையில் கற்று, மாநில, தேசிய அளவில் திறனை வெளிப்படுத்தியவர் இட ஒதுக்கீட்டினை பெற உள்ளனர்.இதற்கான அரசாணை தமிழக அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. 

சிலம்பம் என்பது தமிழ் மண்ணில் பிறந்த, தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டாகும். இதனை கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இப்பொழுது சிலம்பம் தமிழ் மக்களால் பல பகுதிகளில் ஆர்வத்துடன் கற்பிக்கப்பட்டும்,கற்கப்பட்டும் வருகிறது. இது தமிழரின் சிறந்த தற்காப்புக் கலையாகும். சிலம்பாட்டம், சிலம்பொலியாட்டம் எனவும் இதனைக் கூறுவர். கோயில் திருவிழாக்கள் மற்றும் பல முக்கிய தமிழர் நிகழ்வுகளில் சிலம்பாட்டம் தவறாது நடைபெற்று வருகிறது. தமிழரின் இப்பாரம்பரிய கலைக்கு கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

by R.Gnanajothi   on 21 Nov 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.