|
|||||
தமிழக அரசின் இலக்கிய மாமணி விருதுகள் பெறுவோர் அறிவிப்பு! |
|||||
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இலக்கிய மாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த் தாயின் அறிஞர் பெருமக்களுக்குப் பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப்பட்டும் வரும் தமிழக அரசின் இலக்கிய மாமணி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கிய மாமணி வழங்கப்படுகிறது. விருது
2022-ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் அரங்க. ராமலிங்கம் (மரபுத்தமிழ்), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொ.மா. கோதண்டம் (ஆய்வுத்தமிழ்), கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தன் (மா.மருதாசலம்) (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பெற்றுள்ளனர்.
கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி அர்ஜுனன் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர. திருவிடம் (ஆய்வுத்தமிழ்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த あ. பூரணச்சந்திரன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பெற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுக்கு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா. மாணிக்கவாசகன் (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் (ஆய்வுத்தமிழ்), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச.நடராசன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலக்கிய மாமணி விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. ஐந்து லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை அளித்தும் பொன்னாடை அணிவித்தும் சிறப்புச் செய்யப்பெறுவார்கள். |
|||||
by Kumar on 25 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|