LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இ-முன்னேற்றம்,தகவல் தொழில்நுட்ப நண்பன் மற்றும் இரு தமிழ் மென்பொருள்கள் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டன.

இ-முன்னேற்றம்,தகவல் தொழில்நுட்ப நண்பன் மற்றும் இரு தமிழ் மென்பொருள்கள் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டன.

'இ- முன்னேற்றம்', 'தகவல் தொழில்நுட்ப நண்பன்' என்ற இரு இணையதளங்கள் மற்றும் தமிழ் மென்பொருள்களான 'கீழடி-தமிழ் இணைய விசைப்பலகை',' தமழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி' ஆகியவை முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 

இ-முன்னேற்றம் என்ற இணையதளத்தின் மூலம் அரசின் திட்டங்கள் முறையாக கண்காணிக்கப்பட உள்ளன. திட்டத்தின் விவரங்கள், பணி ஒப்பந்தம், தொடங்கப்பட்ட நாள், நடைபெறும் இடம், நிதிநிலைமை, மாதாந்திர வளர்ச்சி உள்ளிட்ட விவரங்கள், புகைப்பட விவரம் ஆகியவை இந்த இணையதளத்தில் இனி பதிவேற்றப்படும்.அதேபோல் தகவல் 'தொழில்நுட்ப நண்பன்' என்ற இணையதளம் தகவல் தொழில் நுட்பவியல் தொழில் குறித்த கருத்து கேட்பு தளமாக விளங்கும். மேலும் தொழில்நுட்பம் சார்ந்த குழுமங்கள் இணைந்து இதில் கொள்கைகளை உருவாக்க இயலும். கொள்கைகள், கருத்துகள் ஆகியவற்றை மின்னஞ்சல் மூலமாக பெறவும் முடியும். இவற்றை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது.

தமிழ் இணைய கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்ட 'கணினி விசைப்பலகை' மற்றும் 'தமிழ் இணைய ஒருங்குகுறி மாற்றி' ஆகிய இரு தமிழ் மென்பொருள்கள் 'கீழடி- தமிழ் இணைய விசைப்பலகை' மற்றும்  'தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி' என புதிய வசதிகளுடன் வழங்கப்பட உள்ளன.

கீழடி விசைப்பலகை, தமிழி 99 விசைப்பலகை, ஒலிபெயர்ப்பு விசைப்பலகை,பழைய தட்டச்சு விசைப் பலகை ஆகிய மூன்றுவித கணினி விசைப் பலகைகளின் ஒருங்கமைவாக இருக்கும்.'தமிழி-தமிழிணையஒருங்குறி மாற்றி' மென்பொருள் தட்டச்சு செய்யப்பட்ட உரைநடை, கோப்பு, ஆவணங்களை தேவைக்கு ஏற்ப மாற்ற உதவும் ஒன்றாகும். இந்த இரு தமிழ் மென்பொருள்களை இலவசமாக தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 

இம்முயற்சி மிக பயனளிக்கக்கூடிய ஒன்று என்றும் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் அலுவலகம் தொடர்பான நடைமுறைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் இம்மென்பொருட்கள் குறித்து தமிழறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

by R.Gnanajothi   on 24 Oct 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.