பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் உடல் நல குறைவால் காலமானார். சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அவர் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.
1931ல் செகந்திராபாத்தில் பிறந்த இவரது இயற்பெயர் தியாகராஜன் . 1977, 84-ம் ஆண்டுகளில் இலக்கிய சிந்தனை விருது பெற்று்ளார். இவர் 1996-ல் அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் இவரது தண்ணீர் நாவல் வாசகர்களிடையே பிரபலமானது. பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், இன்று, ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர், கரைந்த நிழல்கள் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.
200 சிறுகதை, 15 கட்டுரைகளை எழுதியுள்ளார். சாரல் , இலக்கிய சிந்தனை , அக்சரா விருதுகளையும் பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். விருதையும் பெற்றுள்ளார். தண்ணீர் , மானசரோவர், ஒற்றன் உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார்.
|