|
||||||||
சிகாகோவில் நடைபெறும் பெட் னா மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த தமிழ் பெயர்களின் மிகப்பெரிய தொகுப்பான நூலை தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டார். |
||||||||
சிகாகோவில் நடைபெறும் பெட் னா மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த தமிழ் பெயர்களின் நூலை தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டார். பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு , அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32-வது தமிழ் விழா, மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா ஆகியவை அமெரிக்காவின் சிகாகோ நகரில் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. நான்கு நாள் நிகழ்ச்சியில் இரண்டாம் நாளான இன்று வி.ஐ.டி வேந்தர் மற்றும் தமிழியக்கத்தின் தலைவர் திரு.கோ.விசுவநாதன் அவர்களின் சீரிய முயற்சியில் உருவாகியுள்ள "சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்" என்ற நூல் வெளியிடப்பட்டது. 46000 தனித்தமிழ் பெயர்களைக் கொண்ட இந்த நூலை வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் திருமதி.பவள சங்கரி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகவும் , புலவர் வே.பதுமனார் அவர்கள் பதிப்பாசிரியராகவும் பங்காற்றி மிகச்செம்மையாக வெளிவந்துள்ள இந்த நூலை "தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை" அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை வட அமெரிக்கத் தமிழ்ச்ச்சங்கப் பேரவை (பெட்னா) தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் , தொழிலதிபர் திரு.பால் பாண்டியன் , ஹார்வார்ட் தமிழ் இருக்கை மருத்துவர் சு. சம்பந்தம் , வி.ஐ.டி. துணைத்தலைவர் திரு.கோ.வி.செல்வம்,வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.சிவா ,செய்தி வாசிப்பாளர் திருமதி.நிர்மலா பெரியசாமி, எழுத்தாளர் திரு.லேனா தமிழ்வாணன். மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.விடியல் சேகர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் பேசிய தமிழியக்கத்தின் தலைவர் டாக்டர் கோ.விசுவநாதன் அவர்கள், இன்றைய இளம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதைவிட பிறமொழி பெயர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகவும் கவலையளிக்கும் செயலாகும். ஒருவரது பெயர் என்பது அந்த மனிதனின் பொருள் பொதிந்த அவனது தனித்துவமான அடையாளமாகும். பிறமொழியில் பொருளற்ற பெயர்களை வைப்பது அடையாளத்தை தொலைத்து நிற்கும் நிலையை ஏற்படுத்துகிறது. எனவே இந்த அவலத்தை போக்க இந்நூல் பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டார். விழாவில் பேசிய நூலில் தொகுப்பாளர் ச.பார்த்தசாரதி குறிப்பிடுகையில், ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு இனத்தின் வரலாறு அவர்களின் பெவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.சிவா யரிலிருந்து தொடங்குகிறது. உலகின் வேறு எந்த இனமும் தனக்கு சிறிதும் தொடர்பில்லாத, பொருள் தெரியாத ஒரு சொல்லை தன் பெயராக வைப்பதில்லை. தமிழர்கள் குறிப்பாக கடந்த பதினைந்து இருப்பது ஆண்டுகளில் இந்த அவலம் இளம் பெற்றோர்களை பற்றி நாகரீகம் என்ற பெயரில் வாயில் நுழையாத , பொருளற்ற , பிறமொழி பெயர்களை வைக்கும் நிலை உள்ளது. சங்க இலக்கியங்களிலிருந்தும் , நம் பண்பாட்டை எடுத்தியம்பும் ஒரு நல்ல தமிழ் பெயரை நம் பிள்ளைக்கு சூட்ட இந்த நூல் பெரிதும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் திருக்குறள் போன்று ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் , தமிழ் நூலகங்களிலும் இருக்கவேண்டிய நூல் இது என்று குறிப்பிட்டார்.
இந்நூலை பெற: தமிழியக்கம் |
||||||||
by Swathi on 06 Jul 2019 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|