தஞ்சாவூர். திச. 19.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை, பெரியார் மணியம்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்பம், இந்திய மொழிகளின் நடுவன் நிறுவனம் மைசூர், இணைந்து நடத்திய 21-வது இணைய தமிழ் மாநாடு நிறைவுவிழா தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ரிச்சர்ட் டாக்கின்ஸ் அரங்கில் சனிக்கிழமை பிற்பகல் நடைப்பெற்றது.
இவ்விழாவில் பெரியார் மணியம்மை பதிவாளர் பூ. கு. ஸ்ரீவித்யா கே. சரவணன்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொணடு சிறப்புரையாற்னர். பெரியார் மணியாம்மை துணைவேந்தர் ச.வேலுச்சாமி தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் ஆகியோர் தலைமை வகித்து உரையாற்றினார். உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் தலைவர் தவரூபன் தங்கராஜா, மாநாட்டுத் தலைவர் அப்பாசுவாமி முருகையன், மாநாட்டுத் துணைத்தலைவர் வாசு ரெங்கநாதன் ஆகியோர் இவ்விழாவினை நிறைவு செய்தனர். மேலும் தொடர்ந்து மூன்று நாட்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டன. தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் சி. தியாகராஜன் நன்றியுரையாற்றினார்.
|