சிரியா மீது அமெரிக்கா போர்தொடுத்தால், அல்கய்தா தீவிரவாத அமைப்பிற்கு , வலு சேர்க்கும் விதத்தில் அமைந்து விடும் என்பதால், போரை நிறுத்த, ஐ.நா முயற்சிக்க வேண்டும் என சிரியா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து சிரியா அரசு, ஐ.நா விற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, தற்போது ‘‘சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அரசு திட்டமிட்டிருகிறது, இது அல்கய்தா அமைப்பினருக்கும், அவர்களுடைய கூட்டாளிகளுக்கும் ஆதரவாக இருக்கும். அதனால் சிரியா மீது, அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தும் திட்டத்தை தடுக்க முயற்சிக்க வேண்டும். சிரியாவில் நிலவும் அரசியல் பிரச்னைக்கு தீர்வு காண ஐ.நா அமைப்பு உதவ வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|