உணவு விடுதிக்குள், வாடிக்கையாளர்கள் தங்களின் செல் போன்களை அணைத்து வைத்தால், பில் தொகையில், 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என இஸ்ரேல் நாட்டின், ஜெருசலம் நகரில் உள்ள அபு கோஷ் என்ற உணவு விடுதி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து, அபு கோஷ் உணவு விடுதியின் உரிமையாளர், ஜவாதத் இப்ராகிம் கூறியதாவது, இந்த உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள், மகிழ்ச்சியுடன் உரையாடி, உணவுகளை ரசித்து சாப்பிட்டு வந்தனர்; ஆனால், தற்போது மொபைல் போன் வசதி வந்தவுடன், இத்தகைய ரசிப்புத் தன்மை காணாமல் போய்விட்டது. எனவே, வாழ்வின் இனிமையான தருணங்களை மீண்டும் கொண்டு வர விரும்பி, இந்த அறிவிப்பை செய்துள்ளோம் என இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
|