நடிகர் சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், மாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, பிரணீதா நடிப்பதாக தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. அங்கு மிக நீண்ட ஷெட்யூல் நடைபெற்றிருக்கிறது.
அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடுமாம். அதன் பின் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாகி பிப்ரவரிக்குள் முடிந்த பின் படத்தை மார்ச் மாதக் கடைசியில் வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம்.
சூர்யா ஏற்கனவே நடித்த அஞ்சான் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
|