இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூரியா அஞ்சான் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து அவரை சந்தித்து சில பிரபல இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்களாம். ஆனால், அப்படி அவர் கேட்ட கதைகளில் ஒன்றுகூட தேறவில்லையாம்.
அதனால், எவ்வளவு வித்தியாசமான கதையாக இருந்தாலும் அதற்கேற்ப முழுசாக என்னை மாற்றிக்கொண்டு என் உழைப்பை நூறு சதகிவிதம் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால், நல்ல தரமான கதைகள் கிடைக்கவில்லையே என்று கூறிவரும் சூர்யா, மேலும் பல இயக்குனர்களிடம் கதை கேட்கும் படலத்தை முடுக்கி விட்டுள்ளாராம்.
|