மலையாளத்தில் உஸ்தாட் ஹோட்டல், பெங்களூர்டேஸ் போன்ற ஹிட் படங்களை கொடுத்த துல்கர் சல்மான், தமிழில் வாயை மூடிப் பேசவும் என்ற படத்தில் நடித்தார் இந்த படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை என்றாலும், ஓரளவுக்கு ஓடியது. இதனை தொடர்ந்து, மணிரத்தினம் இயக்கத்தில் தற்போது நித்யா மேனன் உடன் இணைந்து, ஓ காதல் கண்மணி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
முற்றிலும் காதலை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்களாம் படக்குழுவினர். இதற்காக, துல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதில் கலந்து கொண்ட ரசிகர்களில் பெரும்பாலானோர், அஜித் பற்றிச் சொல்லுங்க என்று கேட்டதற்கு, “அஜித் அற்புதமானவர். அஜித் சார் மெகா ! இதற்கு மேலே அவரை பற்றிச் சொல்ல வார்த்தைகள் தேவையிருக்காது” என்றார். மேலும் சூர்யாவைப் பற்றி கூறும் போது, “தான் செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் செய்பவர். என்னுடைய உன்மையான இன்ஸ்பரேஷன் இவர் தான்” என்று புகழ்ந்து தள்ளுகிறார் துல்கர்.
|