சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நடித்த ஆம்பள திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி தற்போது வரை நல்ல படியாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில், ஆம்பள படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட சுந்தர் சி, எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப் போன்று ஒரு படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சுந்தர்.சி சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பொதுவாக சுந்தர்.சி படம் என்றால் மசாலா, பொழுதுபோக்கு, ஆக்ஷன், காமெடி என அனைத்தும் நிறைந்திருக்கும். அதேபோல், சிவகார்த்திகேயனும் காமெடியை பிரதானமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இவ்விருவரும் இணைவது ரசிகர்களுக்கு நல்ல ஒரு பொழுது போக்கு படம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் படபிடிப்பு முடிந்ததும், சுந்தர் சி படத்தில் நடிப்பார் என தெரிகிறது.
|