சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான காக்கி சட்டை படம், தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் 25வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரலையாக பதிலளித்தார். இந்த கலந்துரையாடலின் சில சுவாரஸ்ய பதிவுகள் உங்களுக்காக...
கலந்துரையாடலை ஆரம்பிக்கும் முன் சிவகார்த்திகேயன் ஈஸியான கேள்விகளாக கேட்கவும் நண்பர்களே என ட்வீட் செய்ய, எந்த கேள்வி கேட்டாலும் நீங்கள் ஈஸியாகத்தனே பதில் சொல்லபோகிறீர்கள் அண்ணா. என ரசிகர் ஒருவர் பதில் ட்வீட் கொடுக்க சாட் ஆரம்பமானது.
ரசிகர்கள் : இவ்வளவு போராட்டத்துலயும் எது உங்களை சோம்பல் இல்லாமல் வைத்திருக்கிறது?
சிவகார்த்திகேயன் : தியேட்டரில் பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவு, எனக்கு நம்பிக்கையும், எப்படி நான் வேலை செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தது.
ரசிகர்கள் : சமீப வருடங்களாகவே தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா என பி, சி வகுப்பு மக்களிடம் அதிகம் பேசப்படுவது நீங்கள் மட்டுமே ? என்ன செய்கிறீர்கள் அதற்கு?
சிவகார்த்திகேயன் : எனக்கு தெரிந்து பார்வையாளர்கள் என்னிடம் சிறப்பான இணைப்பில் உள்ளனர். பலரும் என்னை சகோதரனாக, நண்பனாக உணர்கீறார்கள். மேலும் காமெடியும் மற்றொரு காரணம்.
ரசிகர்கள் : ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு உங்களின் அடுத்த படம் என்ன?
சிவகார்த்திகேயன் : இன்னமும் நான் அது குறித்து முடிவு செய்யவில்லை.
ரசிகர்கள் : உங்களின் ‘காக்கி சட்டை’ மற்றும் ‘ எதிர் நீச்சல்’ படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் , இயக்குநர் துரைசெந்தில்குமார் குறித்து கூறுங்கள்?
சிவகார்த்திகேயன் : அவர் தான் என்னை மாற்றியவர். மேலும் திரையில் வித்யாசமான முயற்சிகளும் செய்ய வைத்தவர்.
ரசிகர்கள் : தனுஷ் படங்களில் உங்களுக்கு பிடித்த படம்
சிவகார்த்திகேயன் : புதுபேட்டை.
ரசிகர்கள் : மகேஷ் பாபு குறித்து உங்கள் பதில்? அவரது படங்களில் எந்த படம் உங்கள் ஃபேவரிட்?
சிவகார்த்திகேயன் : அவர் திரையில் வந்தாலே பிடிக்கும். அவரது வசன உச்சரிப்பு மிகவும் பிடிக்கும். அவரை சந்தித்தது மகிழ்ச்சி.
ரசிகர்கள் : கல்லூரி மாணவனாக நடிப்பீர்களா?
சிவகார்த்திகேயன் : கண்டிப்பாக , காத்திருக்கிறேன், அது வேடிக்கையாக இருக்கும்.
ரசிகர்கள் : பாண்டிராஜ் தான உங்களுக்கு கே.பி?
சிவகார்த்திகேயன் : தேசிய விருது பெற்ற இயக்குநர் . அவரது படத்தில் எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது பெருமை.
ரசிகர்கள் : அனிருத்திடம் உங்களுக்கு பிடித்தது?
சிவகார்த்திகேயன் : தன்னம்பிக்கை, பக்குவம், மற்றும் திறமை.
ரசிகர்கள் : ராஜமௌலி படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?
சிவகார்த்திகேயன்: அவர் மிகவும் பெரிய மனிதர். கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்.
ரசிகர்கள் : விஜய் சேதுபதியை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்களா? அவரது படங்களில் உங்களுக்கு பிடித்த படம்?
சிவகார்த்திகேயன் : எனக்கு போட்டிகளில் நம்பிக்கை இல்லை. அவரது படங்களில் பீட்சா எனக்கு பிடிக்கும்…
ரசிகர்கள் : அஜித்தை சந்தித்த தருணம் பற்றி?
சிவகார்த்திகேயன் : அவருடன் 5 மணி நேரம் பேசினேன். வாழ்க்கைக்கு தேவையான தன்னம்பிக்கை கிடைத்தது போல் உணர்கிறேன்.
ரசிகர்கள் : விஜய்யை பற்றி உங்கள் கருத்து?
சிவகார்த்திகேயன் : அவர் Complete Entertainer … என்று கூறினார்.
பலரின் கேள்விகளுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க ஆசைதான் .கண்டிப்பாக அடுத்த முறை பதிலளிக்கிறேன் என ட்வீட் செய்துவிட்டு விடைபெற்றார்.
|