கடந்த 1981-ல் வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தை முற்றிலும் புதுமுகங்களைக்கொண்டு ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளாராம் சுந்தர்.சி.
இந்த படத்திற்கு ஏற்கனவே கதை எழுதிய டைரக்டர் ராஜேஷ்வர் மீண்டும் அந்த கதையை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப நவீன பாணியில் ஸ்கிரிப்ட் எழுதி வருகிறாராம்.
சுந்தர்.சி., தற்போது விஷாலை நாயகனாக வைத்து ஆம்பள என்ற படத்தை தற்போது இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்த படத்தை இயக்கிக்கொண்டிருக்கும்போதே பன்னீர் புஷ்பங்கள் ரீமேக்கையும இயக்குகிறாராம். அனைத்து நடிகர் நடிகைகளுமே புதியவர்கள் என்பதால், ஒரே கட்டமாக படபிடிப்பு முடிந்து விடும் என்கிறார்கள் படக்குழுவினர்.
|