மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் நடைபெறும் மோசடியை தடுக்க, மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி உதவிக்கான விண்ணப்பத்தை, இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவரின் பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டாலும், அதற்காக விண்ணப்பிப்பதில் எவ்வித முறைகேடும் நடக்கக் கூடாது என்பதற்காக, அதுவும், இணைய தளத்தில் விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டதாக கல்வித்துறை உயர்ரதிகாரி தெரிவித்துள்ளார்.
|