எஸ்.எஸ்.சி. என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு மத்திய காவல் படைகளில் காலியாக உள்ள 62 ஆயிரத்து 390 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
வயது வரம்பு : 1.8.2015 அன்று 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பு சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி : ஆண்கள் குறைந்தது 170 செ. மீ. உயரம் இருக்க வேண்டும். பெண்கள் 157 செ. மீ., உயரம் இருக்க வேண்டும். ஆண்களுக்கு விரிவடையாத நிலையில் மார்பளவு குறைந்தது 80 செ.மீ., இருக்க வேண்டும். குறைந்தது 5 செ.மீ., விரிவடைய வேண்டும். இரு பாலருக்கும் உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.
தேர்வு முறை: உடற்தகுதித் தேர்வு, உடற் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு ஆகியவை மூலமாக தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ஆன் லைன் மற்றும் ஆப் லைன் மூலமாக ரூ.50 செலுத்தலாம். பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
ஆன் லைன் மூலமாக செலுத்துவோர் http://ssconline.nic.in, http://ssconline2.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக செலுத்தலாம். ஆப் லைன் மூலமாக செலுத்துவோர் ஸ்டேட் பேங்க் சலான் மூலமாக செலுத்தலாம். சி.ஆர்.எப்.எஸ்., எனப்படும் மத்திய அரசுப் பணிகளுக்கான விண்ணப்ப ஸ்டாம்ப் மூலமாகவும் செலுத்தலாம்.
தேர்வு: எழுத்துத் தேர்வு அக்டோபர் 2015-இல் நடத்தப் படும். இதில் ரீசனிங், கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகள் இடம் பெறும். அப்ஜெக்டிவ் முறையில் இதில் கேள்விகள் இடம் பெறும்.
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in & http://ssconline2.gov.in இணைய தளங்கள் வாயிலாக 2 கட்டமாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் : பிப்ரவரி 21 வரை
கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள http://ssc.nic.in என்ற இணைய முகவரியை பார்க்கவும்.
|