LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொடிமரம் மற்றும் சிலைகள் காணவில்லை' - நிர்வாக அதிகாரி புகார்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலானது, 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் தலமாகும். இக்கோயிலில் வருடந்தோறும் திருவாடிப்பூர உற்சவம், மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

 

இவ்விழாக்களில் கலந்து கொள்ளத் தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் திருக்கோயில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, மதுரையில் அமைந்துள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

 

அதில், "கடந்த 2015 மற்றும் 16-ம் ஆண்டுகளில் ஆண்டாள் கோயில் குடமுழுக்கு விழா மற்றும் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்துள்ள வடபத்ரசயனர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற்றது.

 

வெளியே எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

 

 

குறிப்பாகத் திருக்கோயிலில் நடைபெறும் உற்சவங்களின்போதும், விழாக்கள் ஆரம்பமாகும்போதும் கொடியேற்றுவது வழக்கம். இதற்காகப் பழைய கொடிமரங்கள் அகற்றப்பட்டு, புதிய கொடி மரங்கள் நிறுவப்படும். அதன்படி, கோயிலில் மூன்று கொடி மரங்கள் அகற்றப்பட்டு, புதிய கொடிமரம் நிர்மாணிக்கப்பட்டது. அவ்வாறு அகற்றப்பட்ட பழைமையான மூன்று கொடி மரங்களில் செப்புத்தகடு உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் பதிக்கப்பட்டிருந்தது. மூன்று கொடி மரங்களில் தற்போது ஒன்றைத் தவிர மற்ற இரண்டு கொடி மரங்கள் கோயில் வளாகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இது சட்ட விரோதமான செயலாகும்.

 

முன்னதாக, கடந்த 2008, 2009-ம் ஆண்டுகளில் ஆண்டாள் கோயில் கொடிமரம் அருகே அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தின் வாசற்படியில் அமைக்கப்பட்டிருந்த பழைமையான கற்களால் ஆன யானை சிலைகள் இரண்டையும் காணவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. திருக்கோயில் வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம், ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

by Kumar   on 07 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.