இலங்கையில் மனித உரிமை மீறல் நடைபெற்றிப்பதாக எழுந்த புகாரை அடுத்து, ஐ.நா., மனித உரிமை ஆணையர், நவநீதம் பிள்ளை, இலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் இடையே, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும் நவநீதம் பிள்ளை சந்தித்து பேசினார. பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகையில், ""விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்து, நான்கு ஆண்டுகள் ஆகியும், மக்கள் பலர் இன்னும் மனித உரிமை மீறலுக்கு ஆளாகி வருகின்றனர். போரின் போது காணாமல் போனவர்களை பற்றிய முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; இல்லாவிட்டால், இலங்கை அரசு சர்வதேச விசாரணையை சந்திக்க நேரிடும் என நவநீதம் பிள்ளை கூறினார். இந்நிலையில், நவநீதம் பிள்ளையின் குற்றச்சாட்டு குறித்து, இலங்கை தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரம்புக்வெலா, கூறியிருப்பதாவது, இலங்கையில் மனித உரிமை மீறல் உள்ளதாக புகார் கூறிய, நவநீதம் பிள்ளை, அது தொடர்பான ஆதாரங்களை அளித்தால், விசாரிக்க தயாராக உள்ளோம். நவநீதம் பிள்ளை, இலங்கையின் பல பகுதிகளுக்கும் செல்ல சுதந்திரம் அளித்தோம். அவரை சந்தித்த பலர், அவருக்கு தவறான தகவல்களை அளித்து, அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க நினைப்பதாக அவர் தெரிவித்தார்.
|