|
||||||||
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த அமெரிக்க தமிழர் பாடல் வெளியீடு ... |
||||||||
தமிழ்நாட்டுப் பிரச்சனைகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு இழந்துகொண்டிருக்கும் உரிமைகளை மீட்க பல்வேறு வழிகளில் போராடி வருகிறார்கள் . அதற்கு வலு சேர்க்கும் வகையில், அமெரிக்காவில் பணிபுரியும் தமிழர்களாகிய எங்களின் சிறிய பங்களிப்பாக கருதுகிறோம் என்கிறார் நியுஜெர்சியில் வசிக்கும் வசந்த் வசீகரன்.
காவிரி பிரச்சனையை முன்னிறுத்தி வெளியாகியுள்ள ‘அணையைத் திற – Justice for Tamil Nadu’ என்ற பாடல் சமூகத்வலைத் தளங்களில் விரும்பி பகிரப்படுகிறது . அமெரிக்கத் தமிழர்கள் உருவாக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் காவிரி விவகாரம் மற்றும் விவசாயிகள் பிரச்சனைக்கு ஒன்று கூடி தீர்வு காண்போம் என அழைப்பு விடுக்கிறது.
மணிகண்டன் ஆனந்தராஜ் இயற்றிய பாடலுக்கு வசந்த் வசீகரன் இசையமைத்துள்ளார். கிருஷ்ணா ஸ்ரீதரன், சுஷ்மிதா சுதர்ஸன் மற்றும் வசந்த் வசீகரன் பாடியுள்ளனர்.
வா வா தோழா கைகள் கோர்ப்போம், கண்ணீர் மண்ணில் தண்ணீர் சேர்ப்போம் எனத் தொடங்கும் இந்தப் பாடலில் அழுத்தமான வரிகள் இடம்பெற்றுள்ளன ..
‘வந்தாரை வாழ வைத்தோம்
உழவரை கொன்று விட்டோம்
யானை கட்டி போரடித்தோம்
அணையைக் கட்ட மறந்துபுட்டோம்
நீதி கேட்டு வந்தவனை இங்கே
நிர்வாணம் ஆக்கிப்புட்டோம்
ஏர் தூக்கி வளர்ந்தவன இங்கே
எலிக்கறி திங்க வச்சோம்
நூறு நாள் போராட்டம்
குறை கேட்க நேரமில்லை
விவசாய நாட்டைத் தானே
விஷமாக மாத்திப்புட்டோம்’
என்று தமிழ்நாட்டு விவசாயிகள் நிலையை சுட்டிக்காட்டுகிறது.
இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ள வசந்த் வசீகரன் குறிப்பிடுகையில் ‘அமெரிக்காவில் கணிணித் துறையில் பணியாற்றினாலும், திரையுலகில் முழுநேர இசையமைப்பாளராக வேண்டும் என்ற லட்சியத்தில் பல புதிய பாடல்களுக்கு இசையமைத்து வருகிறேன். அந்தப் பாடல்கள் சமூக நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் தனிக் கவனம் செலுத்துகிறேன் என்று குறிப்பிடுகிறார் ..
வசந்த் வசீகரன் அமெரிக்காவில் இன்னிசைக் குழுவும் நீண்ட நாட்களாக நடத்தி வருகிறார். தமிழ்த் திரையுலகின் முக்கிய பாடகர்கள் வசந்த் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்கள்.
தமிழ்நாட்டுப் பிரச்சனைகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு இழந்துகொண்டிருக்கும் உரிமைகளை மீட்க பல்வேறு வழிகளில் போராடி வருகிறார்கள் . அதற்கு வலு சேர்க்கும் வகையில், அமெரிக்காவில் பணிபுரியும் தமிழர்களாகிய எங்களின் சிறிய பங்களிப்பாக கருதுகிறோம் என்கிறார் நியுஜெர்சியில் வசிக்கும் வசந்த் வசீகரன். காவிரி பிரச்சனையை முன்னிறுத்தி வெளியாகியுள்ள ‘அணையைத் திற – Justice for Tamil Nadu’ என்ற பாடல் சமூகத்வலைத் தளங்களில் விரும்பி பகிரப்படுகிறது . அமெரிக்கத் தமிழர்கள் உருவாக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் காவிரி விவகாரம் மற்றும் விவசாயிகள் பிரச்சனைக்கு ஒன்று கூடி தீர்வு காண்போம் என அழைப்பு விடுக்கிறது.
மணிகண்டன் ஆனந்தராஜ் இயற்றிய பாடலுக்கு வசந்த் வசீகரன் இசையமைத்துள்ளார். கிருஷ்ணா ஸ்ரீதரன், சுஷ்மிதா சுதர்ஸன் மற்றும் வசந்த் வசீகரன் பாடியுள்ளனர். வா வா தோழா கைகள் கோர்ப்போம், கண்ணீர் மண்ணில் தண்ணீர் சேர்ப்போம் எனத் தொடங்கும் இந்தப் பாடலில் அழுத்தமான வரிகள் இடம்பெற்றுள்ளன ..
வந்தாரை வாழ வைத்தோம் உழவரை கொன்று விட்டோம் யானை கட்டி போரடித்தோம் அணையைக் கட்ட மறந்துபுட்டோம் நீதி கேட்டு வந்தவனை இங்கே நிர்வாணம் ஆக்கிப்புட்டோம் ஏர் தூக்கி வளர்ந்தவன இங்கே எலிக்கறி திங்க வச்சோம் நூறு நாள் போராட்டம் குறை கேட்க நேரமில்லை விவசாய நாட்டைத் தானே விஷமாக மாத்திப்புட்டோம்
என்று தமிழ்நாட்டு விவசாயிகள் நிலையை சுட்டிக்காட்டுகிறது. இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ள வசந்த் வசீகரன் குறிப்பிடுகையில் ‘அமெரிக்காவில் கணிணித் துறையில் பணியாற்றினாலும், திரையுலகில் முழுநேர இசையமைப்பாளராக வேண்டும் என்ற லட்சியத்தில் பல புதிய பாடல்களுக்கு இசையமைத்து வருகிறேன். அந்தப் பாடல்கள் சமூக நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் தனிக் கவனம் செலுத்துகிறேன் என்று குறிப்பிடுகிறார் ..
வசந்த் வசீகரன் அமெரிக்காவில் இன்னிசைக் குழுவும் நீண்ட நாட்களாக நடத்தி வருகிறார். தமிழ்த் திரையுலகின் முக்கிய பாடகர்கள் வசந்த் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்கள்.. |
||||||||
by Swathi on 04 May 2018 4 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|