|
||||||||
இந்திய விஞ்ஞானிக்கு ஆரியபட்டா விருது |
||||||||
அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி டாக்டர். சண்முகமூர்த்தி லட்சுமணன் அவர்களுக்கு, வட அமெரிக்க ஆயிர்வேத மருத்துவர்களின் கூட்டமைப்பின் (AAPNA) மிக உயரிய விருதான ஆரியபட்டா விருது ஜூலை மாதம் வழங்கப்பட்டது.அவர் பௌதீகம் மற்றும் பண்டைய இந்திய விஞ்ஞானம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.இதில் குறிப்பாக ஆயிர்வேதம் சார்ந்த அவரது ஆய்வுகளைப் பாராட்டி அவருக்கு இவ்வுயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் அவர் பிறந்த ஊரான நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜகதலாவிற்கும்,தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் "ஆயுர்வேதா" என்னும் ஒரு அகில உலக அறிவியல் ஆராயிச்சி journal ஐயும், உலக பிரசித்தி பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களான யேல் மற்றும் வேதிக் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நிறுவியுள்ளார்.
இது குறித்து டாக்டர். சண்முகமூர்த்தி கூறுகையில் "ஆயுர்வேதத்தில் மூன்று தோஷங்களையும் நவீன அறிவியல் பார்வையில் புரிதல் குறித்த ஆராய்ச்சிக்காகவும், ஆயுர்வேத அக்னி கர்மம் எனும் பிரத்யேக சிகிச்சைக்கான "நேனோ ஊசி" (nano- needle) எனும் கருவியை கண்டுபிடித்ததற்காகவும் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டது." என்று விளக்கமளித்தார்.
பண்டைய விஞ்ஞானத்தையும், இன்றைய தொழில்நுட்பத்தையும் இணைக்கும் இந்த சீரிய முயற்சி போற்றத்தக்கதே.அமெரிக்க நாடு இவ்வாராய்ச்சி மேற்கொள்ள எல்லா வித உதவிகளையும் அளித்து வரும் நிலையில் இந்திய அரசும் இதற்குத் துணைநிற்க வேண்டும் என்பது விரும்பத்தக்கது.
|
||||||||
by Swathi on 27 Jul 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|