இந்தியா- ரஷ்யா 19-வது உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வருகை தந்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் நேரில் வரவேற்றனர்.
டெல்லி வந்த ரஷ்ய அதிபர் புதின் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது இந்தியா, ரஷ்யா இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. அப்போது ரூ.36,000 கோடி மதிப்பிலான எஸ்-400 ஏவுகணைகள் வாங்கும் ஓப்பந்தம் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்து ஆகிறது.
எஸ்-400 ஏவுகணைகள் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 300 இலக்குகளை அடையாளம் காணும், ஒரே நோத்தில் 36 இடங்களில் தாக்குதல் நடத்தும் வலிமை கொண்டது.
மேலும், இருநாட்டு ராணுவங்களும் உத்தரப் பிரதேசத்தில் கூட்டு போர் பயிற்சி மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாபினா நகரில் நவம்பர் மாதம் 18-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டு போர் பயிற்சியில் ரஷ்யாவை சேர்ந்த 250 வீரர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டு உள்ளது.
|