அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட, எட்வர்டு ஸ்னோடென்னுக்கு ரஷ்ய அரசு தஞ்சம் அளித்துள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பில், முன்னால் கணினி நிபுணராக பணிபுரிந்தவர், எட்வர்டு ஸ்னோடென். இவர் அமெரிக்காவின் பல புலனாய்வு ரகசியங்களை சமீபத்தில் வெளியிட்டார். இதில் அமெரிக்கா மற்ற நாடுகளை உளவு பார்பதாக அவர் கூறியது, உலக நாடுகளின் கவனத்தை இவரது, பக்கம் திருப்பியது. இதனை அடுத்து, அமெரிக்கா அரசு, ஸ்னோடென் மீது, உளவு பார்த்தல், அரசு ஆவணங்களை திருடியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை கைது செய்ய அரசு முடிவு செய்தது. இதனால், அமெரிக்காவிலிருந்து தலைமறைவான ஸ்னோடென், சீனாவின் ஹாங்காங்கில் தங்கியிருந்தார். அவரை, தன்னிடம் ஒப்படைக்கும்படி, அமெரிக்கா சீனாவிடம் வற்புறுத்தியது. இதையடுத்து, ஸ்னோடென், ரஷ்யா சென்று சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில், சர்வதேச பயணிகள் தங்கியுள்ள பகுதியில், ஸ்னோடென் உள்ளதால், அவரை நாங்கள் கைது செய்ய முடியாது,'' என, அமெரிக்காவுக்கு, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருந்தார். மேலும் ஐஸ்லாந்து அல்லது ஈக்வடார் நாடுகளில் தஞ்சம் அடைய, ஸ்னோடென் திட்டமிட்டிருந்தார். அந்நாடுகளுக்கு செல்லும் வழியில், அவரை அமெரிக்கா கைது செய்ய காத்திருக்கிறது. எனவே, ஸ்னோடென் ரஷ்யாவில் தஞ்சம் அடைய விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு தஞ்சம் அளிக்க ரஷ்யா அரசு ஒப்புக்கொண்டதையடுத்து, மாஸ்கோ விமான நிலையத்தில், பல வாரங்களாக தங்கியிருந்த ஸ்னோடென், நேற்று அங்கிருந்து வெளியேறி ரகசிய இடத்தில் தங்கி இருக்கிறார். ஸ்னோடென்னுக்கு ரஷ்யா தஞ்சம் அளித்துள்ளதை அடுத்து, அமெரிக்க - ரஷ்ய உறவில் விரிசல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
|