LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ரூ. 1.90 கோடி செலவில் இலவச ஸ்மார்ட் பஸ் பாஸ் தயாரிக்க போக்குவரத்து அதிகாரிகள் திட்டம்!

ரூ. 1.90 கோடி செலவில் இலவச ஸ்மார்ட் பஸ் பாஸ் தயாரிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். 

தமிழகம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களைப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரிக்கு செல்வோருக்கு அரசு இலவச பஸ் பாஸ்களை வழங்கி வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - ஆகஸ்ட் காலகட்டத்திற்குள் பாஸ் கொடுக்கப்பட்டு விடும். ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பயனடைந்து வருகிறார்கள். 

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே, மாணவர்களுக்கு இம்முறை  பஸ் பாஸ்களை விரைவில் வழங்கும் பணியில் அதிகாரிகள் வேகம் காட்டி வருகின்றனர். ரூ.1.90 கோடி செலவில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளனர். 

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை; ஐடிஐ, அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எளிதாக பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் வகையில் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பாண்டில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 3,60,000 பஸ் பாஸ்களும், விழுப்புரம்-4,70,435; சேலம்- 2,94,800; கோவை-3,40,000; கும்பகோணம் - 3,76,558; மதுரை- 3,30,000; திருநெல்வேலி-2,49,555 என மொத்தமாக 24,21,348 பஸ் பாஸ்கள் இந்தாண்டு வழங்கப்பட உள்ளது. 

இம்முறை,மாணவர்களின் விவரம் அனைத்தும் அடங்கிய பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.1.90 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான பணி வேகமாக நடந்து வருகிறது. விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

by   on 04 Jun 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.