2013ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஸ்வீடனில் நடைபெற்ற விழாவில் பரிசு விவரத்தை நோபல் தேர்வுக்குழுத் தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்தார். அதன்படி, இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் ஜெர்மனியின் தாமஸ் சுடாப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனித செல்களின் நகர்வை கட்டுப்படுத்துவது எது என்பது தொடர்பான ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 7.7 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசு மூன்று பேருக்கும் சமமாக பிரித்து அளி்க்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகள் இந்த வாரத்திலும், அடுத்த வாரத்திலும் அறிவிக்கப்படுகின்றன.
|