கத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில் புலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இரண்டு காலகட்டத்தில் நடக்கும் ஃபேன்டஸி கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா, பிரபு ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்தபடத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இசையைமக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். இதுவரை படத்தின் பாடல், காமெடி என மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது அதிரடி சண்டைக்காட்சிகளை படமாக்கத் துவங்கியுள்ளாராம் சிம்புதேவன்.
கடந்த சில நாட்களாக கேரளாவில் முகாமிட்டிருக்கும் புலி படக்குழுவினர் வாகாமன் நீர்வீழ்ச்சியில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். தற்போது அதைத்தொடர்ந்து அங்கு மஹோகனி எனும் இடத்திலுள்ள அடர்ந்த காடுகளில் அதிரடி சண்டைக்காட்சிகளை நடத்த இருக்கிறார்களாம்.
இந்த சண்டைக் காட்சியில் விஜய் முதன் முறையாக மார்சியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு நடிக்கப் போகிறாராம். இதற்காக தாய்லாந்தில் இருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் வரவழைப்பட்டுள்ளனர்.
அனேகமாக மன்னர் யுகத்திற்கான சண்டைக்காட்சிகள் இங்கு படமாக்கப்படும் எனத் தெரிகிறது. இதுதவிர அதிரபல்லி என்ற இடத்திலும் ஆக்சன் காட்சிகளை படமாக்கப்போகிறார்கலாம் படக்குழுவினர்.
|