கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பாரீசில் டயானா, தனது நண்பர் டோடி அல்பயதுடன் காரில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஸ்காட்லாந்து போலீசார் கடந்த 16 வருடங்களாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து இளவரசி டயானாவை பிரிட்டன் ராணுவத்தை சேர்ந்த சிலர் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய தகவல் குறித்து ஸ்காட்லாந்து போலீசார் கூறுகையில், வழக்கை மீண்டும் விசாரிக்கவில்லை. புதிதாக கிடைத்துள்ள தகவல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றோம் என கூறியுள்ளனர்.
|