|
|||||
பயங்கரவாதிகளைப் புகழும் பாகிஸ்தானுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? சுஷ்மா சிவராஜ் கேள்வி |
|||||
பயங்கரவாதிகளை புகழும் பாகிஸ்தானுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? என்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பினார். ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம், நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:- பாகிஸ்தான் உடனான பல சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சிறந்த வழி பேச்சுவார்த்தைதான் என்பதை இந்தியா நம்புகிறது. அதன்படி, பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த எத்தனையோ தடவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தை திடீரென நின்றுவிடுகிறது என்றால், அதற்கு பாகிஸ்தானின் நடத்தைதான் காரணம். ஆனால், அமைதி முயற்சியை இந்தியா சீர்குலைப்பதாக பாகிஸ்தான் பொய் சொல்லி வருகிறது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றவுடன், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்துவது என்று யோசனை கூறினார். அதை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது. ஏற்றுக்கொண்ட சில மணி நேரத்திலேயே , 3 இந்திய வீரர்களை பாகிஸ்தான் பயங்கர வாதிகள் கொன்றனர். இது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விருப்பத்தையா காட்டுகிறது? இதுபோல், நான் 2016-ம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தேன். அப்போது பதான்கோட் விமான தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தகைய ரத்த ஆறுக்கிடையே எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொலை செய்யும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் புகழுகிறது. அப்பாவி மக்களின் ரத்தத்தை பார்க்க மறுக்கிறது. அந்த நாட்டுடன் எப்படி பேச்சு நடத்த முடியும்? தனது குற்றத்தை மறைக்க இந்தியா மீது பழிபோடுவது பாகிஸ்தானின் வழக்கமாகி விட்டது. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் பேசினார். |
|||||
by Mani Bharathi on 30 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|