தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு
வயது தகுதி : விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி : இரண்டு பதவிகளுக்குமே பத்தாம் வகுப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100/-ஐ விண்ணப்பக் கட்டணமாகவும், ரூ.400/-ஐ தேர்வுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறானாளிகள் மற்றும் மகளிருக்கு எந்தக் கட்டணமும் கிடையாது.
விண்ணபங்களை ஆன்-லைன் மூலம் சமர்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவலை அறிந்துக் கொள்ள http://www.dopchennai.in/PDF/Notification-1.pdf என்ற இணைய பக்கத்தைப் பார்க்கவும்.
விண்ணபிக்க கடைசி நாள் : 04.10.2015
|