LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நாடாளுமன்ற தேர்தல்- 18 சட்டமன்ற இடைத்தேர்தல்கள்: தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது!

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி  முதல் ஏழு கட்டமாக நடத்தப்படும்' என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்  ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது. கூடவே 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்களும் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டில்லியில்  வெளியிட்டு, அவர் கூறியதாவது: 

நாடு முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 90 கோடி பேர் ஓட்டளிக்க உள்ளனர்; இதற்காக 10 லட்சம் ஓட்டு சாவடிகள் அமைக்கப்படும். கடந்த 2014  தேர்தலின்போது ஒன்பது லட்சம் ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11; இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18; மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல்  23; நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29; ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6; ஆறாம் கட்ட தேர்தல் மே 12; ஏழாம் கட்ட தேர்தல் மே 19 தேதிகளில் நடக்கும். அனைத்து தொகுதிகளுக்கும் மே 23- ந் தேதி ஓட்டு எண்ணப்படும்.

முதல் கட்ட தேர்தலில் 91, இரண்டாம் கட்டத்தில் 97, மூன்றாம் கட்டத்தில் 115, நான்காம் கட்டத்தில் 71, ஐந்தாம் கட்டத்தில் 51, ஆறாம் கட்டத்தில் 59, ஏழாம் கட்டத்தில் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கும். ஆந்திரா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களுக்கு, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும். ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தல் தற்போது நடக்காது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும். இந்த தேர்தலுடன் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கு, இடைத் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடன் அமலுக்கு வருகின்றன.  சமூக வலைத்தளங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட முன்சான்று பெறப்பட வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

by   on 12 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.