பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் பணத்தில், பிரிட்டன் தலைநகர், லண்டனில், நான்கு சொகுசு வீடுகள் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டதால் நவாஸ் ஷெரீப்புக்கு, 10 ஆண்டுகளும், மகள் மரியமுக்கு, 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மருமகன் முகமது ஷப்தாருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த 3 பேரின் சிறை தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இதனையடுத்து, 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குலுஷம் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க 3 பேருக்கும் தற்காலிக பரோல் வழங்கப்பட்ட நிலையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
|