கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய எல்லை பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தொடர்ந்ததால், இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது இதில், பாகிஸ்தானில் உள்ள ஷக்மா என்ற இடத்தில், அந்நாட்டு ராணுவ அதிகாரி, சர்பிராஸ் என்பவர் கொல்லப்பட்டார். எல்லைப் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை கண்டித்து, பாகிஸ்தான் கீழ் சபையில் அந்நாட்டு ராணுவ அமைச்சர், ராணா தன்வீர் நேற்று தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவது வருத்தம் அளிப்பதாகவும்; இந்தியாவுடன் ஆக்கபூர்வமான வகையில் தொடர்பு வைத்து கொள்ள நினைப்பதாக அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
|