இந்தியா முழுவதும் உள்ள பட்டதாரி இளைஞர்களில் மூன்றில் ஒருவர் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர் என மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2012 அக்டோபர் மாதம் முதல் 2013 மே மாதம் வரை அனைத்து மாநிலம் யூனியன் பிரதேசம், மாவட்டங்கள் என ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 354 வீடுகளில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதி்ல் 82 ஆயிரத்து 624 வீடுகள் புறநகர் பகுதிகளில் இருந்தும், 50 ஆயிரத்து 730 வீடுகள் கிராமப்புறங்களிலும் கணக்கில் கொள்ளப்பட்டது.
இந்த கருத்து கணிப்பின் படி, 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே அதிகளவில் வேலை வாய்ப்பில்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகரித்து வரும் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கிறது. இந்த வேலைவாய்பி்ன்மையின் விகிதம் கிராமப்புறங்களில் 36.6 சதவீதமாகவும், புறநகர் பகுதிகளில் இதன் விகிதம் 26.5 சதவீதமாகவும் காணப்படுகிறது. அதே நேரத்தில் எவ்வித கல்வி அறிவு இல்லாத15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை 3.7 சதவீதமாக காணப்படுகிறது.
|