LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஸ்நோடனுக்கு அடைக்களம் கொடுத்ததால் - ரஷ்ய அதிபர் சந்திப்பை தவிர்த்தார் ஒபாமா !

உலக நாடுகளை கணினி மூலம் அமெரிக்கா வேவு பார்ப்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியவர் ஸ்நோடன். முன்னாள் உளவுத்துறை கணினி ஊழியரான இவரை கைது செய்ய அமெரிக்கா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்னோடெனுக்கு ரஷ்ய அரசு அடைக்களம் கொடுத்துள்ளது. இதனால் அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா ரஷியா மீது அதிருப்தியில் இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ரஷ்யா, அமெரிக்க நாடுகளிடையே கைதிகள் பரிவர்த்தனை ஒப்பந்தம் இல்லாவிட்டாலும், ஒரு நாட்டின் சட்டத்தை மற்ற நாடு மதிப்பது இரு நாடுகளின் வழக்கமாக இருந்து வந்தது. இதுவரை ரஷியா எங்களிடம் இப்படி நடந்துகொண்டதில்லை. இருந்தாலும் ரஷியாவுடனான உறவு இன்னும் முறிந்துவிடவில்லை. இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷியா செல்லயிருக்கிறேன்.உலக பொருளாதார சக்திகள் பங்குபெறும் முக்கியமான மாநாடு அது. அந்த மாநாடு ரஷியாவில் நடந்தாலும், உலகின் முன்னணி பொருளாதார சக்தியாகத் திகழும் அமெரிக்கா அதில் கலந்து கொள்வது அவசியம் என்பதால் அங்கு செல்கிறேன் என்று ஒபாமா தெரிவித்தார்.  மேலும் ரஷியாவில் அமெரிக்கா அதிபர்  ஒபாமா ஜி -20 மாநாட்டில் மாநாட்டில் மட்டும் கலந்து கொள்கிறார் என்றும், ஆனால் ரஷ்ய அதிபர் புதினை தனியாக சந்தித்து பேசும் திட்டத்தை அவர் ரத்து செய்து உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

by Swathi   on 07 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.