தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களை மீட்பதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு ரோபோவை ஈரான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ்(Pars) என அழைக்கப்படும் இந்த ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது. ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்.(RTS Labs), என்ற ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டது.
கடலில் மூழ்கி அதிகமானோர் இறக்கும் காஸ்பியன் கடல் பகுதியில் இந்த ரோபோ கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில், 75 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கில் இருந்து, பாதிக்கப்பட்டவரை தூக்கிக் கொண்டு, 22 வினாடிகளில் இந்த ரோபோ கரையை அடைந்தது. இந்த ரோபோவை மேலும் மேம்படுத்தி, நீரில் மூழ்குபவர்களை மீட்பதற்கு மட்டுமல்லாமல், உளவு பார்க்கவும் இதை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|