LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

சென்னையில் முதல் நாள் காலையில் துவங்கிய மழை இரவு வரை தொடர்ந்தது. 2-வது நாளும் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்கிறது. 

புறநகரிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவொற்றியூரில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. 

 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை தொடர்வதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதேபோல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் நீடிக்கும் மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் பொய்கை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம், , கோடியக்கரை, செம்போடை போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது அதேபோல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்  தொடர்மழை காரணமாக அங்கு உள்ள இந்திரா நகர்  குளம் நிரம்பிவழிகிறது.

 இதனால் மழைநீர்  ஊருக்குள் புகுந்து உள்ளது. பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளிலும், அப்பகுதியில் உள்ள  வீடுகளிலும் கடைகளிலும் வெள்ளம் புகுந்து உள்ளது. 

அக்டோபரிலேயே துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை வானிலை மாற்றங்களால் தள்ளிப் போனது. தாமதமாக 1-ந் தேதி, பருவமழை துவங்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் முதல் நாளே  பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.  

by Mani Bharathi   on 01 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.