ஜே.சி.குமரப்பா என்னும் பொருளியலாளர் என்னும் தமிழரே காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர். உண்மையில் காந்தியப் பொருளாதாரம் என்பது குமரப்பப் பொருளாதாரமே. ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் E = MC2 என்னும் கோட்பாடு இயற்பியல் உலகின் அடிப்படைவிதிகளை எல்லாம் புரட்டிப்போட்டதைப்போல இவரது தாய்மைப் பொருளாதாரம் என்னும் பொருளியல் உலகின் அடிப்படைகளை அசைக்கும்திறன் கொண்டது.
ஆடம் சுமித்தின் கட்டுப்பாடற்ற பொருளியலும் காரல்மார்கின் பொதுவுடைமைப் பொருளியலும் கோலாச்சிக்கொண்டிருந்த கடந்த நூற்றாண்டில் இடைப்பகுதியில் திருநெல்வேலியில் இருந்து இடம்பெயர்ந்து மதுரையில் கிறித்துவ தேவாலய பூசகராக இருந்த ஒருவரின் பெயரனாக தஞ்சையில் பிறந்து அமெரிக்க தேவலாயத்தில் ஆடம் சுமித்தின் பொருளாதாரத்தை மறுத்து உரையாற்றி, அதன் விளைவாக தாய்மைப் பொருளாதாரம் என்னும் அறம்சார் பொருளாதாரக் கோட்பாட்டை உருவாக்கியவர் சோசப் செல்லத்துரை கொர்னீயசு என்னும் சோ.செ.குமரப்பா (J.C.Kumarappa, 1892-01-4 : 1960-01-30).
கூட்டுக்கொள்ளைப் பொருளாதாரத்தால் உலகம் சீரழிந்து கொண்டிருக்கும் இந்நாளில் அவரது தாய்மைப் பொருளாதாரத்தின் தேவையை பலரும் உணரத் தொடங்கி உள்ளனர். இயற்பியல் உலகில் ஆல்பர்ட் ஐன்சுடின் உருவாக்கிய சார்பியல் கோட்பாட்டிற்கு இணையான ஆழமும் நுட்பமும் கொண்டது குமரப்பாவின் தாய்மைப் பொருளாதாரம். அவரதுசெல்வம் (Wealth) = உழைப்பாளர் (Employee) + வளம் (Money) என்னும் பொருளாதாரக் கோட்பாடானது இன்றைக்கு அமெர்த்திய சென்னும் சூமேக்கரும் பேசுகின்ற நலம்சார் பொருளாதாரத்தின் ஆணிவேராகும்.
அவரது சிந்தனைகளை மேன்மேலும் ஆழ்ந்து கற்பதன் வழியாக அறம்சார் பொருளியல் வாழ்க்கையை மேற்கொள்ள முயல்வோமாக!
|