|
|||||
மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய வகை வண்ணத்துப்பூச்சி 33 ஆண்டுக்குப் பிறகு கண்டுபிடிப்பு |
|||||
சென்னை மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன்’ என்ற புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாகத் தமிழகச் சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மேகமலை கோட்டத்தில் ‘கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன்’ எனும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப் பட்டுள்ள புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனமாகும். மேகமலையில் காணப்படுவதால், இருப்பிடப் பெயரே அதற்குச் சூட்டப்பட்டுள்ளது.
எண்ணிக்கை 337ஆக உயர்ந்துள்ளது.
தேனியைச் சேர்ந்த ‘வனம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் காலேஷ் சதாசிவம், எஸ்.ராமசாமி காமையா மற்றும் சி.பி.ராஜ்குமார் ஆகியோர் இந்த வண்ணத்துப்பூச்சி இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். வனத் துறைத் தலைவர் சீனிவாச ரெட்டி, துணை இயக்குநர் ஆனந்த், கள இயக்குநர் பத்மாவதி ஆகியோர் உதவியுடன் ஆய்வாளர்கள் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றிய தகவல், ‘என்டோமான்’ எனும் அறிவியல் ஆய்வு இதழில் தற்போது வெளியிடப் பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு மூலம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் எண்ணிக்கை 337ஆக உயர்ந்துள்ளது. |
|||||
by Kumar on 14 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|