LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமான நிலையம்

சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை நந்தனத்தில்  நடைபெற்றது. இந்த விழாவில் எம்.ஜி.ஆரின் முழு உருவப் படத்தைத் திறந்து வைத்து, அவரது உரைகள் அடங்கிய நூல்களையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். 

விழாவில் அவர் பேசியதாவது:
சென்னை விமான நிலையம் வரும் 2024-ஆம் ஆண்டில் பயணிகள், சரக்கு போக்குவரத்து அம்சங்களில் முழு நிறைவை அடையும் என்பதால் புதிய விமான நிலையம் அமைப்பது அவசியமாகிறது. சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளைச் சீரமைக்கும் பணிகளைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளைச் சீரமைத்தல் கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். 

இந்தக் கழகம் செயல்பட ஏதுவாக, முதன்மைச் செயலாளர் நிலையில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் உடனடியாக நியமிக்கப்படுவர்.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், விவசாயிகள் தங்களது வீடு அல்லது நிலத்தின் ஒரு பகுதியில் காய்கறிகள் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த "முதலமைச்சரின் வீட்டுக் காய்கறி உற்பத்தித் திட்டம்' என்ற புதிய திட்டம் ஏற்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் அது கிராமப் புறங்களில் தொடங்கப்படும். தென்சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி,
பள்ளிக்கரணையில் புறநகர் மருத்துவமனை அமைக்கப்படும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆறு தளங்களைக் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படும்.

ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கிலோமீட்டர் நீளமுள்ள மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலைக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நெடுஞ்சாலை என பெயர் சூட்டப்படும்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

by Mani Bharathi   on 01 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.