விண்வெளியில் வெற்றிகரமாக ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் நாசா நிறுவனம் தற்போது, சந்திரனில் தாவரங்கள் வளர்க்கும் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. இதன் முதல் கட்டமாக, துளசி மற்றும் டர்னிப் செடிகளை வளர்க்க நாசா முடிவு செய்துள்ளதாம். தாவர வளர்ப்பின் மூலமாக, சந்திரனில் மனிதன் உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் மேற்கொள்ளவுள்ள நாசா இந்த ஆராச்சியை வரும் 2015 ஆம் ஆண்டுக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.
இத்திட்டத்தின்படி, ஒரு சிறிய பெட்டகம் போல இருக்கும் கருவியில், இந்த தாவரங்களின் விதைகள் வைக்கப்படுமாம். இது சந்திரனை அடைந்ததும், சிறிய அளவு நீர் அந்த விதைகளுக்கு அளிக்கப்படும், அந்த பெட்டகத்தினுள் இருக்கும் காற்று, விதைகள் 5 முதல் 10 நாட்கள் வளர போதுமானதாக இருக்குமாம். சந்திரனில் விதைகளின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறிப்பிட்ட இடைவெளியில் புகைப்படம் எடுத்து, அதன் மூலம் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
|