பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்ற வருமாறு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அழைப்பிதழை, பிரிட்டனில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும், நரேந்திர மோதிக்கு தனித்தனியே அனுப்பி இருக்கின்றன. அந்த அழைப்பிதழில், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் காமன்ஸ் அவையில், "நவீன இந்தியாவின் எதிர்காலம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்துமாறு மோடிக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா கலவரத்திற்கு பிறகு மோடியுடனான உறவுகளை அமெரிக்கா போன்று பிரிட்டனும் துண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
|