கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நாணயம் படத்திற்கு பிறகு சிபிராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை.
சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியிலும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினியின் லிங்கா படம் தமிழக திரையரங்குகளை ஆக்கிரமிப்பு செய்துகொண்டிருந்தாலும், இன்னமும் ஒரு சில தியேட்டர்களில் நாய்கள் ஜாக்கிரதை படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனால் படு உற்சாகமடைந்துள்ள சிபிராஜ் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். அடுத்த ஆண்டு இறுதியில் இதன் வேலைகள் ஆரம்பமாகுமாம். சத்யராஜின் நாதம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து, சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருந்த இப்படத்தினை வேறு மொழிகளில் ரீ-மேக் செய்ய உரிமை கேட்டும் நிறைய பேர் சிபிராஜை தொடர்பு கொண்டுள்ளனர். தமிழக உரிமையை 70 லட்சத்துக்கு விற்றார் சிபி.
படமோ 4 கோடி வசூல் செய்து படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு பலத்த லாபம் கொடுத்தது. எனவே ரீமேக் ரைட்ஸை பெரிய விலைக்கு விற்று லாபம் பார்க்க முடிவு செய்துள்ள சிபி கோடிக்கணக்கில் விலை சொல்கிறாராம். இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றிப் பெற்றுள்ளதால் வேறு சில படங்களில் நடிக்கவும் சிபிராஜுக்கு அழைப்புகள் வந்துக்கொண்டிருக்கிறதாம்.
|