LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள் அனைத்தையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 

ஊட்டியில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக மைசூருக்கு மாற்றப்பட்டு அங்கு எவ்வித மின்னாக்கப் பணிகளும் இன்றி வெறுமனே இருந்த ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகளை தமிழக அரசின் சென்னை தமிழ் கல்வெட்டுப் பிரிவிற்கு  மாற்ற மத்திய தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் தமிழகத்தில் பெரும்பாலான தகவல்கள் கல்வெட்டுகள் வழியாகவே கிடைப்பதால் தமிழகத்தில் 1961-ல் தொல்லியல் துறை மற்றும் கல்வெட்டியல் துறை உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதும், ஆவணப்படுத்துவதும் அனைவரும் அறியும் வகையில் அதனைப் புதுப்பித்து வெளியிடுவதும் தொல்லியல் துறையின் முக்கியப் பணி என்று குறிப்பிட்டுள்ளார்.

மைசூர் கல்வெட்டியல் துறையில் ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 65,000 கல்வெட்டுகள் தமிழுடன் தொடர்புடைய என்றும்,இந்தக் கல்வெட்டுகள் இன்றுவரை புதுப்பித்து வெளியிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தமிழ் கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை தொழில் நுட்ப முறைகள் மூலம் பாதுகாக்கவும் மற்றும் தேவையான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு மதுரைக்கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளையை தமிழ் கல்வெட்டியல் கிளை என்று பெயர் மாற்றம் செய்யவும் மத்திய தொல்லியல் துறையிடம் உள்ள தமிழ் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுக்கள் அனைத்தையும் சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு 6 மாதத்திற்குள் மாற்றவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போதுமான ஆய்வாளர்களை நியமிக்கவும் சென்னை கல்வெட்டியல் பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தரவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

by R.Gnanajothi   on 21 Aug 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.