நமக்கு தெரியாத புதிய மொழிகளை, பாட்டு வடிவில் கற்கும்போது அது எளிதில் நம் மனதில் பதிந்து விடுவதாக லண்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
இது பற்றி, லண்டனில் உள்ள ரீட் ஸ்கூல் ஆப் மியூசிக் ஆய்வாளர், கரோன் லூத்க் கூறியதாவது, பொதுவாக, ஆங்கிலம் பேசுபவர்களுக்கு, ஹங்கேரிய மொழியை எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அதனால் ஹங்கேரி மொழியில் எழுதப்பட்ட சொற்களே சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் மொத்தம் 20 பங்கேற்றனர். அவர்களிடம். ஐந்து வகையாக சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவில் பாட்டு வடிவில் இம்மொழியைக் கற்றவர்கள், மற்றவர்களைவிட விரைவாக, புதிய மொழியை கற்றுக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.அதே நேரத்தில், வாசிப்பு மூலம் கற்றுக் கொண்டவர்கள், மிகக் குறைந்த அளவிலேயே புதிய மொழியை கற்றுக் கொண்டதும் தெரியவந்தது. மேலும் ஒரு மொழியை கவனமாக, பாடல் வடிவில் கற்றுக் கொள்பவர்களால், எந்த மொழியையும் கற்க முடியும் என்பது நிரூபணமாகி உள்ளது.
|